Thursday 18 September 2008

Centininary year 2010 - Development Woks

29-09-2008
நூற்றாண்டில் தடம் பதிக்கும் கொக்குவில் இந்து அன்னை

2010ம் ஆண்டில் எமது கல்லூரித்தாய் நூறாவது ஆண்டில் தடம் பதிக்கும் வரலாற்று நிகழ்சி ஆரம்பமாகிறது. வரலாற்றில் ஒருமுறை மட்டும் வரும் இத்திருநாளில், பெருநாளில் அவளுக்கு மகுடம் சூட்டி, அழகூட்டி ஆராதிப்பது அவளின் புதல்வர்களாகிய எங்களின் வரலாற்றுக் கடமையாகும்.

நூற்றாண்டு விழா இந்தத் தலைமுறைக்கான ஒரு சந்தர்ப்பமாகும். அன்னையின் புதல்வர்கள் அனைவரதும் கரங்களை இறுகப்பற்றிக்கொண்டு நின்று இந்த செய்தியூடாக எல்லோரது இதயங்களுக்கும் ஒரு நல்ல செய்தியை சொல்ல நான் பெரிதும் விரும்புகிறேன்.

நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களுக்கான அவை ஒன்று கல்லூரியில் 2004ல் அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 25மில்லியன் ரூhபா செலவில் பல் வேறு அபிவிருத்திp வேலைகள் மேற் கொள்ளப்பட வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ன. இதற்கான நிதி ஆதாரத்தை கல்லூரியின் பழைய மாணவர்களிடமிருந்து பெறுவதென எண்ணியுள்ளோம். எமது கல்லூரி அன்னையின் புதல்வர்கள் உலகெங்கும் பரந்து விரிந்து வாழ்கிறார்கள். புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள பழைய மாணவர்கள் பலர் எம்முடன் அடிக்கடி தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கல்விக் கண்ணைத் திறந்த கல்லூரி அன்னையின் விருத்தியில் பழைய மாணவர்கள் பங்கேற்பது மிகவும் முக்கியமானதும் வரலாற்றுக் கடமையுமாகும்.

பழைய மாணவர் குடும்பம் ஒன்றிலிருந்து ஆகக் குறைந்த தொகையாக ரூபா50,000 வீதம் 25மில்லியன் ரூபாவைப் பெறலாம் என எண்ணியுள்ளோம். கல்லூரியின் நூற்றாண்டு விழாவின்போது கல்லூரியில் திரைநீக்கம் செய்யப்படவுள்ள நன்கொடையாளர் வரவுப் பட்டியலில் இவர்களது விபரங்கள் பொறிக்கப்பட்டு நிரந்தரமாகப் பேணப்படவுள்ளது.

'கல்விப்பணி கடவுள் பணி என்று சொல்வார்கள். எழைக்கு எழுத்தறிவித்தல் எல்லாப் புண்ணியங்களிலும் மேலானது என்று சான்றோர்கள் கூறியுள்ளார்கள். கல்விக் கண்ணைத் திறந்து விடுவதன் மூலம் பல தலைமுறைகளுக்கான வாழ்கைப் பாதைகளையும் பயணங்களையும் ஆரம்பித்து வைக்க முடியும். யாழப்பாண மக்களின் அழிக்க முடியாத மாபெரும் சொத்து கல்வியாகும்;. வேரறுந்து விழுது அறுந்து ஆதரவு அற்று நிற்கும் எம்மவர்களின் கல்விப் பணிக்கு நீங்கள் அனைவரும் கரம் கொடுக்க வேண்டுமென இறைவனைக் கேட்பது போல உங்களிடம் கேட்கிறோம். கல்லூரித்தாய்க்கு உதவுங்கள். அது உங்கள் வாழ்வுக்கு உந்து விசையாக அமையும்.

கல்லூரித் தாய்க்கு உதவுவதன் மூலம் எத்தனையோ ஆயிரம் ஆயிரம் இதயங்களின் நல்வாழ்வுக்கு நீங்கள் அத்திவாரம் இட முடியும். 'கல்விக்கு உயிர் கொடுத்தோர் மரணிப்பதில்லை' என இஸ்லாமிய நெறியில் ஒரு வாக்கு உண்டு. நீங்கள் பல வழிகளில் உதவுகிறீர்கள். கல்விப் பணிக்கு உதவி,; எமது கல்லூரியின் கல்விக்கண்களைத்திறக்க ஆக்கமும் ஊக்கமும் கொடுக்க வேண்டுமென அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

கொக்குவில் இந்துக் கல்லூரி நூற்றாண்டு விழாவை யொட்டிய அபிவிருத்தி வேலைகளுக்கான மதிப்பீடு உலகெங்கும் வாழ் கல்லுர்ரிமைந்தர்களின் கவனத்திற்கும் செயலுக்கும்.
1. சின்னத்தம்பி கட்டிட திருத்த வேலைகள்.ரூபா 1,207,5002.
2.செல்லையா கட்டிட திருத்த வேலைகள்....ரூபா 447,725 3.
3.பஞ்சலிங்கம் கேட்போர்கூடம்..................ரூபா 684,0004.
4.மகாதேவன் கட்டிடம்.....................................................ரூபா 590,0005.
5.மகேந்திரன் கட்டிடம்....................................................ரூபா 1,239,4306.
6.தென் பகுதி கட்டிடம் (6வகுப்பறைகள்) ..ரூபா 722,0007.
7.சுப்பிரமணியம் கட்டிடம் ..........................................ரூபா 2,259,7508.
8.சி. கே. கந்தசுவாமி கட்டிடம் .........ரூபா 1,065,8909.
9.பிரதான நூல் நிலையம் .........................................ரூபா 1,062,00010.
10.ஹண்டி பேரின்பநாயகம் சிறுவர் நூலகம்..ரூபா 245,25011.
11.சி. கே. கந்தசுவாமி படிப்பகம் .........ரூபா 1,750,00012.
12.முடிவு பெறாத கட்டிட வேலைகள் .. ரூபா 904,32513.
13. மலசலகூட திருத்த வேலைகள் ......ரூபா 109,02514.
14.ஹண்டி பேரின்பநாயகம் கட்டிட ...ரூபா 3,30969015.
15மதில்கள் ..........................................................................ரூபா 500,000

16. தளபாட திருத்தியமைப்பு .......................................ரூபா 500,00017.
17.மைதான சீரமைப்பு .................................................ரூபா 500,00018.
18.மைதான விஸ்தீகரிப்பு ...........................................ரூபா 500,00019.
19.விளையாட்டுப் போட்டிகள் ..................................ரூபா 1,411,90020.
20.கலைத்திறன் போட்டிகள் ........................................ரூபா 560,00021.

21.விழா செலவுகள் .......................................................ரூபா 1,700,000.
மெத்தம் ...........................................................................ரூபா 21,268,485

Wednesday 10 September 2008

எங்கே...எப்போ...


பாரா முகங்கள் பாரெங்கும்
தீராப் பிரச்சினைகள் திசையெங்கும்
வாராத்துணைகள் வழியெங்கும்
ஊரா இது? உறவுதான் ஏது?

பங்காளிகள் பகையாளிகளாயினர்
போராளிகள் துரோகிகளாயினர்
நீதிபதிகள் நிலை தடுமாறினர்
தீர்க்க வந்தவர் தீர்த்துக் கட்டினர்

இரத்தத்தின் இரத்தம் மறைந்து விட்டது
உடன் பிறப்போ மறந்து விட்டது
தொண்டர்கள் தொலைவில் நிற்கின்றனர்
உறவெல்லாம் பெயர்ந்த புலத்தில்

மானிடம் இங்கே மரித்து விட்டது
இயற்கை இங்கே இறந்து விட்டது
விடியல் இங்கே விலகி நிற்கிறது
முடிவென்பது எங்கே? எப்போ?

http://www.kokuvilhindu.com

Wednesday 3 September 2008

எங்கள் கல்லுாரி

அதிபர் திரு அ. அகிலதாஸ்
www.kokuvilhindu.com



கலைக்கோவில் கட்டி யெழுப்பிய சிற்பிகள்.

Tuesday 2 September 2008

கதியின் புனித நீராட்டு விழாவும் இலண்டன் முறைகளும்



www.kokuvilhindu.com
கதியின் புனித நீராட்டு விழா தடல் புடலாக ஏற்பாடு செய்யப்பட்டது. பலவண்ண அழைப்பிதழ், பெரிய மண்டபம் பார்டி பரடைஸ், சிந்து மஹால்,
எனத் தகப்பன் அசத்திவிட்டார். தாய் லண்டனிலை முதல் முதலாக சாத்திர சம்பிரதாயப்படி நடக்கிறது இந்தச் சடங்கு தான் எண்டு வாறவை சொல்ல வேண்டும் என்று தொடங்கினார்.

கதி பிறந்தவுடன் வைத்த பெயர் கார்திகா. அவளுக்கு தனது மறைந்த பேத்தியின் நிiவாக இலட்சுமி என்று பெயர் வைக்கத்தான் தகப்பனுக்கு விருப்பம். தகப்பன் பக்கத்து பெயர் வைக்க தாய்க்கு விருப்பமில்லை. அது பழங்காலத்து பெயரப்பா, எண் சாத்திரப்படியும் சரிவராது என்று பல சாட்டுக்கள் சொல்லி அதை தட்டிக்கழித்து விட்டார்.
பிள்ளை கார்திகை நட்சத்திரத்தில் பிறந்தபடியால் கார்திகா எண்டு வைப்பம். நாலாம் திகதி பிறந்த படியால் ஒண்டாம் நம்பரிலை வர பெயர் வைக்க வேண்டும். அப்ப கார்ததிகா எண்டு பெயர் வைத்து ஆங்கிலத்திலை Carthyka எழுதச்சரியாயிருக்கும் என்று சொல்லி தனது தகப்பன் கார்திகேசுவை அதற்குச் சம்பத்தப் படுத்தி விட்டார் தாயார்.
ஆரம்பப்பாடசாலை ஆசிரியைக்கு அந்தப் பெயர் வாய்க்குள் நுழைய கடினமான படியால் அவர் Cathy அழைக்கத் தொடங்கிவிட்டார். கார்திகாவுக்கும் அந்தப் பெயர்தான் பிடித்துக் கொண்டது. தாய் தகப்பன் எல்லோரும் கதி என்றே அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

கதி நடனமும் வீணையும் பயின்றாள். கதி மிக நன்றாக ஆடுவாள். அவளோடு ஐந்து பிள்ளைகள் பயின்றனர். மற்ற நால்வரும் நல்ல நிறம். கதி கொஞ்சம் மங்கல். அதனால் நடன ஆசிரியைக்கு கதியைப் பிடிக்காது. வேண்டுமென்று பிழை பிடிப்பது; மேடையில் ஆடும் போது பின்னால் விடுவது; போன்றவை பிடிக்காததால் கதி இடையில் சண்டை பிடித்துக் கொண்டு நடனத்தை நிறுத்தி விட்டு வீணையில் அதிக கவனம் செலுத்தி வந்தாள். இதற்கிடையில் தகப்பனுக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்து விட்டது. முழுக்குடும்பமும் இந்தியா சென்று வந்தனர். வரும்போது வீணை ஆசிரியைக்கு ஒன்றும் கொண்டு வந்து கொடுக்கவில்லை. அன்றிலிருந்து வீணை ஆசிரியைக்கு கதியை பிடிக்காது. சில மாதங்களில் வீணை பயில்வதையும் விட்டாச்சு.

இப்போது கதியின் புனித நீராட்டு விழாவிற்கு வருவோம். கதியின் தகப்பனின் தங்கையும் தாயும் கனடாவிலிருந்து விழாவிற்கு வந்திருந்தனர். தகப்பனின் தாய்க்கு கதியின் அம்மாவை அவ்வளவு பிடிக்காது. சாமத்தியச் சடங்கு மாமியார்தான் முன்னுக்கு நின்று செய்யவேண்டும். தாய் முன்னுக்கு வரக்கூடாது அதுதான் முறை என்று ஒரு குண்டை வந்ததும் வராததுமாக தூக்கிப் போட்டு;ட்டா. அதற்கு விளக்கமும் கொடுத்தா. மகள் சாமத்தியப்பட்டுட்டா எண்டதும் தாய்க்கு கவலை வந்துடும் தான் கிழவியாப்போனன் எண்டு. தகப்பனுக்கு கவலை வந்துடும் தான் ;இனி சீதனம் தேட வேண்டுமெண்டு. கவலைப்படுகிறவையை முன்னுக்கு விடுகி;றேல்லை. மாமன் மாமி தான் சந்தோசப்படுவினம் தங்கடை வீட்டுக்கு மருமகள் றெடி என்டு. அதாலைதான் மாமன் மாமியை விட்டு சடங்கு செய்யிறவை. கதியின் தாய்க்கு இதைக் கேட்டதும் கடும் கோபம் தான் வீடியோவிலை வர ஏலாது என்டு. கோபத்தை மாமியிலை காட்ட எலாது. கோபத்தை காட்டீனது முறைகளில். இஞ்சை லண்டனிலை இந்த முறை தலை எல்லாம் பாக்கேலாது எண்டு அடிக்கடி சொல்லத் தொடங்கிவிட்டா.
நீராட்டு விழா முடிந்து தண்ணிப் பாட்டீ தொடங்கியது. பல வகையான குடி வகை பரிமாறப்பட்டது. கதியின் அம்மாவிற்கு மதுபானம் பரிமாறிய பையன் மேல் கோபம் வந்து விட்டது. 'தம்பி நீர் கிளாஸ் களை மாறி கொடுக்கிறீர். இந்தப் பெரிய கிளாசுக்குள் பியர், இந்த மெல்லிய நீட்டு கிளாசுக்குள்ளை வைன், இந்தக் கிளாசுக்குள்ளை விஸ்க்கி அப்பிடிக் கொடுக்குறதுதான் முறை.'

வசந்தம் 2008

www.kokuvilhindu.com









http://www.kokuvilhindu.com/


ரமேஷ் சர்மா - லவினா சுதேந்திரன்.

வசந்தம் 2007

www.kokuvilhindu.com

வசந்தம் 05

Mr. P. Kamalanathan (then pricipal of KHC) was invited to U. K to raise funds for C. K. Kanthaswami Learning Centre.
http://www.kokuvilhindu.com/










வசந்தம்

www.kokuvilhindu.com

சி கே கந்கசுவாமி படிப்பகம்.

www.kokuvilhindu.com





Better late than never was appropriate for the way KHCOSA (UK) decided to set up a Learning Centre in memory of our late Principal of KHC Mr C K Kanthaswami (CKK). It has been a custom in our community to do something in memory of a person after his demise, who had been very popular in that community,. CKK started teaching at KHC after his graduation and continued his services as vice-principal and retired as principal at KHC. The teacher who had dedicated his life for the betterment of the younger generation of Kokuvil and its neighbouring villages, chose to live in Australia after his retirement with his family, like many thousands of Srilankan Tamils. It would have melted his heart with joy during his later part of his life, if this Learning Centre would have been built or even mooted while he was alive.
Better late than never, the LC building in memory of CKK was completed before the third year anniversary of CKK’s demise. With the A9 road to Jaffna closed with the rest of Srilanka and the war intensified over an year in that part of the world, the determination of the KHCOSA UK and KHCOSA Jaffna, in particular the then president late Mr Nadarajah’s untiring efforts, with spiralling cost increase, managed to complete this magnificent majestic two-storey building with marble floor for £29,500. This money was collected in the UK from old students of KHC, which include CKK’s children as well.Equipping the building immediately with appropriate modern state of the art learning materials including computers, softwares etc is paramount if the current student population is to benefit. It would sooth the soul of CKK if the students of CKK living all over the world had a hand in filling the building with the necessary materials for the current and future students of KHC.
S. Kanagasundaram21.04.2007

நுாற்றாண்டு விழா 2010


Forever young….Forever sweet……Forever smart….
Our KHC will celebratecentenary in 2010.


There will be a worldwide celebration. Old students, teachers and well wishers gather together for this great event.
கொக்குவில் இந்துவின் நுாற்றாண்டு விழா 2010.
எமது இணையம்:http://www.kokuvilhindu.com/

Wednesday 13 August 2008

Kokuvil Hindu College

KHC is one of the leading high school in Srilanka. It is the first educational establishment in Srilanka for which a history book was published in hard pack. In 2008 A' Level examination students of Kokuvil Hindu College achieved best resuts in Jaffna district.